40 தொகுதிகளில் இமாலய வெற்றி - துரை வைகோ புகழாரம்

69பார்த்தது
*"முதலமைச்சரின் மக்கள் நலத் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று அடைந்ததால் இன்று தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளில் இமாலய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் பெற்று தந்துள்ளனர் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். "*

திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்போது அக்கட்சியின் நிர்வாகிகள் சார்பில் துரை வைகோவிற்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரைவைகோ.


ஒரு இமாலய வெற்றியை பெற்று தந்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்த வெற்றியால, தொண்டர்கள் மகிழ்ச்சி வைகோ மகிழ்ச்சி.

முதல்வரின் மக்கள் நலத் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று அடைந்ததால் இன்று தமிழ்நாடு, புதுவை உட்பட 40 தொகுதிகளில் இமாலய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் பெற்று தந்துள்ளனர்.


என் வெற்றிக்கு பாடுபட்ட அமைச்சர் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் ரகுபதி , அமைச்சர் மெய்யநாதன் திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த வெற்றி, அனைத்து இயக்கங்கள் நிர்வாகிகள் எந்தப் பதவியையும் வகிக்காத தொண்டர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி