உவேசா குறித்து கமலஹாசன் பதிவு

68பார்த்தது
உவேசா குறித்து கமலஹாசன் பதிவு
தமிழறிஞர் உ.வே.சா பிறந்தநாள் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் எக்ஸ் பக்கத்தில், மண்ணில் நீரில் நெருப்பில் அழிந்தவை எத்தனையோ… எஞ்சிய இலக்கியப் பனுவல்களை ஓலைச் சுவடியில் இருந்து கால மாற்றத்துக்கு ஏற்ப அச்சுப் பிரதிகளாக்கி அசாத்திய காரியம் செய்த தமிழ் முன்னோடி உவேசா அவர்களுக்கு எந்த விதத்தில் நன்றி சொன்னாலும் போதாது என்றே தோன்றும். பழந்தமிழை, காலத்தையும் கடந்த புதுத் தமிழாய்ப் பிறப்பித்த தமிழறிஞரின் பிறந்த நாளில் நன்றி எண்ணுவோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி