கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தியவர்கள் விழுப்புரம், சேலம், புதுவை ஜிப
்மர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மூன்று பெண்கள் ஒரு திர
ுநங்கை உட்பட மொத்தம் 58 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 206 ஆண்கள், 12 பெண்கள், ஒரு திருநங்கை என 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
. இதில் 18 பேரில் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் கிரிட்டிக்கல் வார்டு என்று சொல்லப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் எழுந்துள்ளது.