சென்னை: 2018ம் ஆண்டு பூந்தமல்லியில் 6 வயது மகனை எரித்து கொன்று கால்வாயில் வீசிய வழக்கில், தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆத்திரத்தில் இருந்த மீனாட்சி என்பவர், தனது 6 வயது மகனான ஜெயகாந்த் என்ற சிறுவனை தலையணையால் அழுத்தி, கொலை செய்து உடலை எரித்து வீட்டின் அருகே இருந்த கால்வாயில் வீசினார். இவ்வழக்கை விசாரித்த பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், மீனாட்சிக்கு ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.