கேரளாவில் பெண் ஒருவர் தான் பணியாற்றிய இடத்தில் தனது கையை தவறான நோக்கத்துடன் பிடித்ததாக தனது மேலாளர் மீது புகார் அளித்திருந்தார். ஆனால், வேலையில் சரியாக இல்லாததால் பணிநீக்கம் செய்ததாதாக், அந்தப் பெண் தன்னை மிரட்டி இவ்வாறு கூறுவதாக மேலாளர் கூறியுள்ளார். இதுகுறித்த வழக்கு விசாரணை கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, “புகார்தாரர் ஒரு பெண் என்பதால், அவர் சொல்வது அனைத்தும் உண்மை என்று கூறமுடியாது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என நீதிபதி கூறியுள்ளார்.