கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஜூன் 26) காலை 62ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 63ஆக உயர்ந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆறு பெண்கள் உட்பட 63 பேர் கொடிய மெத்தனால் கலக்கப்பட்ட விஷச்சாராயத்திற்கு இரையாகியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த நபர்களில் தற்போது வரையில் 74 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.