உளுந்தூர்பேட்டை: கடையின் பூட்டை உடைத்து திருட்டு

74பார்த்தது
உளுந்துார்பேட்டை அடுத்த பு. மாம்பாக்கம் அருகே டிராக்டர் ஒர்க்கர்ஸ் கடை உள்ளது. நேற்று முன்தினம் மாலை உரிமையாளர் சதீஷ், 45; வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, டேபிளில் வைக்கப்பட்டிருந்த, 500 ரூபாய் திருடு போனது தெரிந்தது. உளுந்துார்பேட்டை போலீசார், அங்குள்ள சி. சி. டி. வி. , கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், இரு மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி