கள்ளச்சாராய வழக்கில் மேலும் 3 பேருக்கு 'குண்டாஸ்'

68பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வழக்கில் கைதான 24 நபர்களில், மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சி. பி. சி. ஐ. டி. , போலீசார், 24 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பரமசிவம், 40; மாதவச்சேரி ராமர், 36; கருணாபுரம் முருகேசன், 48; ஆகியோரை, சி. பி. சி. ஐ. டி. , எஸ். பி. , வினோத்சாந்தாராம் பரிந்துரையை ஏற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள மூவரிடம் நேற்று சி. பி. சி. ஐ. டி. , போலீசார் வழங்கினர்.


இதன் மூலம், கள்ளச்சாராய வழக்கில் இதுவரை 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி