வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

58பார்த்தது
வன பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளுரில் 23 அடி உயர வன பத்ரகாளி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.

விழா, கடந்த 12ம் தேதி காலை 9: 00 மணியளவில் மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 9: 00 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

கும்பாபிேஷக தினமான நேற்று, காலை 8: 00 மணியளவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, புதிய சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்து நவாவரண பூஜை பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

மதியம் 12: 00 மணியளவில் கடம் புறப்பட்டாகி 23 அடி உயர மகா ஸ்ரீ வன பத்ரகாளி அம்மன் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்புடைய செய்தி