செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி

50பார்த்தது
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியமாம்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் நேற்று பார்வையிட்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வரசு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பொதுமக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசின் சாதனைகள், கொள்வதற்காக தெரிந்து தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட பெரியமாம்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டன. இப்புகைப்பட கண்காட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி