சட்னியில் மிதந்த பல்லி.. 8 பேருக்கு வாந்தி மயக்கம்

64பார்த்தது
சட்னியில் மிதந்த பல்லி.. 8 பேருக்கு வாந்தி மயக்கம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியில் சுப்பிரமணி என்பவற்றின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர்களுக்கு, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இட்லி வாங்கி வந்துள்ளனர். அதனை சாப்பிட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் வந்துள்ளது. இதனையடுத்து இட்லிக்கு கொடுத்த சட்னியில் பல்லி செத்து மிதந்தது தெரியவந்தது. பின்னர் 3 குழந்தை உட்பட 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி