தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது- சித்தராமையா

51பார்த்தது
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது- சித்தராமையா
தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நாளொன்றுக்கு 1 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இருந்து நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. (11500 cusecs) வீதம் இன்று முதல் ஜீலை 31 ஆம் தேதி வரை திறந்து விட காவிரி நீர் ஒழுங்காற்று குழு நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், "கர்நாடக அணைகளில் சராசரியை காட்டிலும் சுமார் 28 சதவீத நீர் குறைவாக உள்ளது. தற்போதுள்ள சூழலில் தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை. தற்போதைக்கு கர்நாடக அணைகளுக்கு என்ன நீர்வரத்து உள்ளதோ அதை திறந்து விடுகிறோம்" என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி