இரு தரப்பினர் இடையே மோதல் ஒன்பது பேர் மீது வழக்குபதிவு

83பார்த்தது
இரு தரப்பினர் இடையே மோதல் ஒன்பது பேர் மீது வழக்குபதிவு
வாணாபுரம் அருகே அத்தியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ் முனைவி குஷ்பு (வயது 29). இவரது தம்பி பாண்டியன் என்பவர் அதே ஊரை சேர்ந்த கோவிந்தாம்மாள் மகள் கல்கி என்பவரை காதலித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதே போல், கோவிந்தம்மாள் மகன் சூர்யா என்பவர், குஷ்புவின் தங்கை கலைச்செல்வியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மீண்டும் இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தம்மாள் தரப்பினர் குஷ்பு மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குஷ்பு பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாரி மகன் கோவிந்த ராஜ், முனியன் மகன் ராஜகோபால், ராஜகோபால் மனைவி கோவிந் தம்மாள், மகன்கள் சூர்யா, தீனா, மாணிக்கம் மகன் குப்பன், இவரது மனைவி முனியம்மாள், மகன் முனியப்பிள்ளை, வெங்கடே சன் மகன் தமிழ் ஆகிய 9 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து குப்பன் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி