ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை - போலீஸ் தகவல்

63பார்த்தது
ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை - போலீஸ் தகவல்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கொலைக்கான வாய்ப்புகள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும், 2 கடிதங்களும் அவர் எழுதியது என தடயவியல் துறை உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தினர் கடந்த 2ஆம் தேதி உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் 4ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் சடலமாக கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டு தோட்டத்தில் மீட்கப்பட்டார். உடற்கூறாய்வு முடிவடைந்து சொந்த கிராமமான கரைசுத்துபுதூரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி