அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த மிகப்பெரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இப்பணிகள் 20,332 அரசுப் பள்ளிகளில் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 17,221 பள்ளிகளில் ஜூன் மாதம் இரண்டாம் வார இறுதிக்குள் நிறைவடையும் வண்ணம் பணிகள் நடைபெற்று வருகிறது. உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் என மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வரும் கல்வியாண்டு முதல் புதுமையான அனுபவங்களோடு கல்வி கற்பார்கள் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.