440 கி.மீ பயணம் செய்து ரத்த தானம் செய்த நபர்.!

69பார்த்தது
440 கி.மீ பயணம் செய்து ரத்த தானம் செய்த நபர்.!
ஷீரடியில் பூ வியாபாரியான ரவீந்திர அஷ்டேகர் (36), அபூர்வ பாம்பே வகை ரத்த பிரிவைக் கொண்டவர். இந்த நிலையில் மத்திய பிரதேசம் இந்தூர் மருத்துவமனையில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பாம்பே வகை ரத்தம் தேவைப்படுவதாகவும் வாட்ஸ்அப் மூலம் அறிந்த அவர், தனது சொந்த செலவில் 440 கி.மீ பயணம் செய்து அந்த பெண்ணுக்கு ரத்த தானம் செய்தார். இதே போல அவர் கடந்த காலங்களில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளார். நாட்டில் 179 பேருக்கு மட்டுமே இந்த வகை ரத்தம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரத்த வங்கிகளில் இது கிடைக்காது.

தொடர்புடைய செய்தி