சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தாமல் இருந்த 468 பேருந்துகளில் 448ல் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக MTC தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து பல்வேறு விபத்துகள் நிகழ்ந்த நிலையில், பொது மக்கள் கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.