பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல்

20120பார்த்தது
பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல்
2024-25 கல்வி ஆண்டில், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல், மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகள் அணிய தடை உள்ளிட்ட 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கோடை வெயில் தணிந்து பரவலாக மழை பெய்து வருவதால், வரும் ஜுன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தெரிகிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் ஜுன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. இதனால், ஜுன் 6 அல்லது 11ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி