விபத்து ஏற்படுத்திய சிறுவன் மது அருந்தும் வீடியோ வைரல்

74பார்த்தது
புனே - கல்யாணி நகரில் ஞாயிற்றுக்கிழமை(மே 19) இரவு போர்ஷே காரில் வந்த வேதாந்த் அகர்வால் என்ற சிறுவன் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 15 மணி நேரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. சிறார் என்பதால் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் சாலை விபத்து குறித்து கட்டுரை எழுதிகொடுத்துவிட்டு வெளியே போக சொல்லியிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் ஆல்கஹால் பரிசோதனை முடிவு எதிர்மறையானது. ஆனால் விபத்து நடப்பதற்கு முன் வேதாந்த் தனது நண்பர்களுடன் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றவாளியான விஷாலின் தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி