திருநெல்வேலியில் பட்டப் பகலில் ஓட்டல் வாசலில் தீபக் ராஜா என்ற வாலிபர் நேற்று (மே 20) வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் காரில் தப்பிய 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் மற்றும் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி துரிதமான விசாரணைக்கு உறுதியளித்த நிலையில் கலைந்துச் சென்றனர்.