“நான் தான் நாடாளுமன்ற உறுப்பினர்” - தமிழிசை பேட்டி

603பார்த்தது
“நான் தான் நாடாளுமன்ற உறுப்பினர்” - தமிழிசை பேட்டி
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், இன்று (ஜூன் 6) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். தென் சென்னையில் அரசியல் சார்பு இல்லாமல் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருக்கும் இளைஞர்கள் என்னுடன் இணைந்து பணியாற்றலாம். தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நான்தான் நாடாளுமன்ற உறுப்பினர்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி