கணவரின் மரணத்தை தாங்க முடியாமல் பெண் ஒருவர், தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூருவில் யலஹங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது. யலஹங்கா ஆர்எம்இசட் அடுக்குமாடி குடியிருப்பில் புலிவர்த்தி ஸ்ரீதர் (47), ரம்யா (40) தம்பதிக்கு மகளும், பார்கவ் (13) என்ற மகனும் உள்ளனர். ஸ்ரீதர் 3 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் இறந்தார். இதனால் மனமுடைந்த ரம்யா, மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். மகள் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.