திடீரென இடிந்த வீடு.. கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் மீட்பு

66பார்த்தது
திடீரென இடிந்த வீடு.. கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேர் மீட்பு
சென்னை ராஜமங்கலம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் காரணமாக ராஜாஜி நகர் 2வது தெருவில் உள்ள வீடு நேற்று (அக்.15) மாலை 4 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பக்கத்து வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்த 5 மாத கர்ப்பிணி மீனலோட்சினி (29), அவரது தாய் சாந்தி (51) மேலும் ஒருவர் என 3 பேர் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கர்ப்பிணி உள்பட மூவரையும் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி