இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்

73பார்த்தது
இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவில் கடந்த 48 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும் பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தற்போது தரையிறக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து டெல்லி சென்ற Indigo விமானம் அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற Akasa Air விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.