நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், சிங்கமுத்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, சிங்கமுத்து தன்னை தரக்குறைவாக பேசியுள்ளதாக வடிவேலு குற்றம்சாட்டியிருந்தார்.