கனமழை எச்சரிக்கை - முன்கூட்டியே நெல் அறுவடை

67பார்த்தது
கனமழை எச்சரிக்கை - முன்கூட்டியே நெல் அறுவடை
புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால், பாகூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இதனால், ஓரளவாவது நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம் என கூறி வருகின்றனர். முன்னதாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் மழையால் நாசமாகியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி