தவெக மாநாடு: வெயில் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் மயக்கம்

67பார்த்தது
தவெக மாநாடு: வெயில் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் மயக்கம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் வெயில் தாக்கத்தால் 100-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் வெயில் சுட்டெரித்து வருவதால், வெயிலின் தாக்கத்தை பொறுக்க முடியாத பல தொண்டர்கள் நாற்காலியை தலையில் கவிழ்த்தபடி அமர்ந்துள்ளனர். மேலும் சிலர் மாநாட்டு திடலில் கட்டியிருந்த கட்சிக் கொடியை கிழித்து தலையில் கட்டிக் கொண்டு மாநாடு தொடங்கும் நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி