வங்கிகளில் கடன் வாங்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக ரிசர்வ் வாங்கி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், கடன் ஒப்புதல் வழங்கிய நாளில் இருந்தே கடனுக்காக வட்டியை கணக்கிடக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட நாளில் இருந்து தான் வட்டியை கணக்கிட வேண்டும் என புதிய வழிகாட்டுதல் நடைமுறையை வெளியிட்டுள்ளது.