21 கோடீஸ்வரர்கள் இணைந்து 70 கோடி இந்தியர்களைவிட அதிகமான சொத்துகளை வைத்துள்ளதை பற்றி பிரதமர் மோடி ஒருபோதும் பேசமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். ”கடந்த 2012 முதல் 2021 வரை நாட்டில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை வெறும் 1 சதவீத மக்களிடம் மட்டுமே சென்றுள்ளது,கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பெரும்பாலான வளங்கள் ஒன்றிரெண்டு நிறுவனங்களின் கைகளுக்கே சென்றது” என்றார்.