காதலி இல்லை என கிண்டல் செய்த நண்பனைக் கொன்ற நபர்

73பார்த்தது
காதலி இல்லை என கிண்டல் செய்த நண்பனைக் கொன்ற நபர்
சமீபத்தில் குஜராத் மாநிலம் வதோதராவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ரஞ்சித் மற்றும் திஷாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இதில் ரஞ்சித்துக்கு காதலி இல்லை என்று எப்போதும் திஷாந்த் கேலி செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் திஷாந்தின் வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள முடியாத ரஞ்சித், அவரை கோர்ட் வளாக பகுதிக்கு வரும்படி கூறியுள்ளார். திஷாந்த் வந்ததும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி