அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி பறிமுதல்

85பார்த்தது
அரசு பேருந்தில் இருந்து துப்பாக்கி பறிமுதல்
திருநெல்வேலி போக்குவரத்து பணிமனையில் இன்று (மே 15) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் துப்பாக்கி, அரிவாள் ஆகியவை இருந்துள்ளன. இதனையறிந்த பணிமனை மேலாளர், உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பேருந்தில் இருந்த துப்பாக்கி மற்றும் அரிவாளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பேருந்தில் துப்பாக்கியை வைத்துச் சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.