ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்: சீமான் புகழாரம்

68பார்த்தது
ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்: சீமான் புகழாரம்
தமிழ்நாட்டில் மூடப்படவிருந்த 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, மேலும் 12,000 பள்ளிகளைத் தொடங்கி வைத்து, இலவச மதிய உணவு கொடுத்து ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள் காமராஜர் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், பெருந்தலைவரின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், மானத்தமிழ்ப் பிள்ளைகள் அவரைப்போன்றே நேர்மையும், எளிமையும், உண்மையுமாக நின்று தொண்டாற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி