"போராட்டத்தை கைவிட வேண்டும்" - அமைச்சர் வலியுறுத்தல்

75பார்த்தது
"போராட்டத்தை கைவிட வேண்டும்" - அமைச்சர் வலியுறுத்தல்
சாம்சங் போராட்டம் குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என சிஐடியூ-வை அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். தொழிற்சங்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார். மேலும், “சாம்சங் ஊழியர்களை விரோதமாக பார்க்கவில்லை, அடக்குமுறை நடக்கவில்லை. போலீசாருடன் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி