கர்நாடகா மாநிலம் புத்தூரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன தங்கள் மகளுக்கு பேய் மாப்பிள்ளை வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சுமார் 50 பேர் பதிலளித்ததாக மணமகளின் குடும்பத் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இறந்த மகளுக்கு திருமணம் நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் உள்ள துலுநாடு பகுதிகளில் இறந்தவர்களின் ஆத்மாவை நினைத்து திருமணம் செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.