குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சிறுவன் பலி

18154பார்த்தது
பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுவன் அருவியில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பெருக்கு காரணமாக பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, ஆகிய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி