தனியாக கழன்று ஓடிய ரயில் இன்ஜின் - பரபரப்பு சம்பவம்

70பார்த்தது
தனியாக கழன்று ஓடிய ரயில் இன்ஜின் - பரபரப்பு சம்பவம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விரைவு ரயிலில் தனியாக கழன்று சென்ற என்ஜினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் தீப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயிலில் என்ஜின் மற்றும் பெட்டிகளை இணைக்கும் கப்லிங் உடைந்ததால் ஒரு மணி நேரமாக ரயில் பெட்டிகள் தனியாக நிற்கின்றன. நடுவழியில் ரயில் நின்றுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். ரயில்வே ஊழியர்கள் என்ஜினை இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி