சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

74பார்த்தது
சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து
சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்கு பின் 40 எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக பேசியதாக சபாநாயகர் அப்பாவு மீது அதிமுகவின் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "புகார்தாரர் தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார். வழக்கை தாக்கல் செய்ய கட்சி அவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை" என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது

தொடர்புடைய செய்தி