‘பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது’ - ஆட்சியர் உத்தரவு

63பார்த்தது
‘பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது’ - ஆட்சியர் உத்தரவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (அக்.26) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே அனைத்துப் பள்ளிகளுக்கும் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “கனமழை இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள், அவற்றை நடத்த வேண்டாம்” என அம்மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி