ஆபாச படத்தை வெளியிடுவேன் என கூறிய போலி எஸ்.ஐ

71பார்த்தது
ஆபாச படத்தை வெளியிடுவேன் என கூறிய போலி எஸ்.ஐ
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தங்கி கொரியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி காலை இவரை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர் தன்னை போலீஸ் எஸ்.ஐ எனக்கூறி, உங்களது ஆபாச படம் இணையத்தில் கசிந்துள்ளது அதனை தடுத்து நிறுத்த ரூ.10 அனுப்புங்கள் என கூறியுள்ளார். உடனே அந்தப்பெண் அந்த நபர் வாங்கிக்கணக்கிற்கு ரூ.6,500 அனுப்பியுள்ளார். பின்னர் இளம்பெண்ணின் தந்தையை தொடர்புகொண்டு பணம் கேட்டுள்ளார். இதனையறிந்த அந்த பெண், இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் அவர் போலீஸ் இல்லை என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி