புனேவில் போர்ஷே கார் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வேதாந்த் அகர்வால் என்ற மைனர் சிறுவன் வேகமாக காரை ஓட்டி இரண்டு ஐடி ஊழியர்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தார். இந்த வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த அன்று இரவு தான் மிகவும் குடிபோதையில் இருந்ததை சிறுவன் ஒப்புக்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அன்று நடந்த அனைத்து நிகழ்வுகளும் தனக்கு முழுமையாக நினைவில் இல்லை என்று அவர் அதிகாரிகளிடம் கூறியதாவும் போலீஸார் கூறினர்.