வாக்கு எண்ணிக்கை.. இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு

60பார்த்தது
வாக்கு எண்ணிக்கை.. இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையை நேர்மையாகவும் முறையாகவும் நடத்த வேண்டும். முறைகேடு நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை முதலில் எண்ணி, அதன் முடிவுகளை உடனே அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே EVM வாக்குகளை எண்ண வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி