ஆபாச படம் பார்த்ததாக கூறி நகை பட்டறை தொழிலாளியை மிரட்டி ரூ.42,000 பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்தவர் லாலா ராம். இவரது மொபைல் போனுக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், நாங்கள் சைபர் கிரைமில் இருந்து பேசுகிறோம்.. 'உங்கள் மொபைல் போனில் இருந்து அதிக ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளதால், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை முடித்து வைக்க பணம் வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர்.