தாளவாடி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் - பீதியில் மக்கள்

71பார்த்தது
தாளவாடி பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் - பீதியில் மக்கள்
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் பிசிலவாடி செல்லும் சாலையில் சிறுத்தை புலி உலா வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூசைபுரம், ஒசூர், தொட்டகாஜனூர், பாரதிபுரம் ஆகிய கிராமங்களிலுள்ள கல்குவாரிகள் மற்றும் விவசாய நிலங்களில் கடந்த சில தினங்களாக சிறுத்தைப்புலி நடமாடி வருகிறது. எனவே, உடனடியாக வனத்துறையினர் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி