சென்னிமலையில் தேங்காய் ஏலம்.

80பார்த்தது
சென்னிமலையில் தேங்காய் ஏலம்.
பெருந்துறையை அடுத்துள்ள
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 5, 859 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 30 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 40 காசுக்கும், சராசரி விலையாக 31 ரூபாய் 41 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2, 442 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 76 ஆயிரத்து 566 ரூபாய்க்கு விற்பனையானது.
------

தொடர்புடைய செய்தி