சென்னிமலை அருகே சாராய ஊறல் வைத்திருந்த மூதாட்டி கைது.

59பார்த்தது
சென்னிமலை அருகே சாராய ஊறல் வைத்திருந்த மூதாட்டி கைது.
பெருந்துறையை அடுத்துள்ள
சென்னிமலை அருகே மைலாடி காட்டூர் ஞானிபாளையம் பகுதியில் சாராய ஊரல் இருப்பதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் உடனடியாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஒரு வீட்டின் பின்புறம் பாத்ரூம் அருகில் சுமார் 15 லிட்டர் அளவுள்ள சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது.
பின்னர் சாராய ஊரல் வைத்திருந்த வள்ளியம்மாள் (69) என்ற மூதாட்டியை கைது செய்து சாராய ஊறவை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து வள்ளியம்மாளை போலீசார் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

தொடர்புடைய செய்தி