ஜூன் 4-ந் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை

1541பார்த்தது
ஜூன் 4-ந் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. ஈரோடு கிழக்கு ஈரோடு மேற்கு மொடக்குறிச்சி தாராபுரம் காங்கேயம் குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனியாக சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி முதல் அங்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பாதுகாப்பு பணி வரும் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரியில் உள்ள பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு சூழ்நிலை கருதி சித்தோடு ஐ ஆர் டி டி கல்லூரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் ஜூன் 4-ஆம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி