ஈரோட்டில் பயங்கர தீ விபத்து; பல லட்ச ரூபாய் சேதம்!

590பார்த்தது
ஈரோட்டில் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பம்பாளையத்தில் இருந்து நசியனூர் செல்லும் சாலையில் கட்டில், பீரோ, நாற்காலி உள்ளிட்ட மரத்திலானவீட்டு உபயோகப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. வில்லரசம்பட்டியைச் சேர்ந்த உதயகுமார், ஜெயகுமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள்.
இந்த நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதிதாக வீட்டு உபயோக பொருள்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த நிறுவனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து ஊழியர்கள் நிறுவனத்தைவிட்டு வெளியே ஓடி வந் தனர். சற்று நேரத்தில் பர்னிச்சர் பொருள்களில் தீப்பற்றி மளமள வென எரியத் தொடங்கியது. தகவலின்பேரில் ஈரோடு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர் கள் 10-க்கும் மேற்பட்டோர் 3 தீயணைப்பு வாகனங்களில் வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடித் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய பர்னிச்சர் பொருள்கள் தீயில் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு வடக்கு போலீஸார் விசாரணைமேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி