கோபி: ஆம்புலன்ஸ், டூவீலர் மோதல் - தொழிலாளி பலி

585பார்த்தது
கோபி: ஆம்புலன்ஸ், டூவீலர் மோதல் - தொழிலாளி பலி
கோபி அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 20), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன்(36), பிரபு(35). இவர்கள் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விக்னேஷ், சென்னியப்பன், பிரபு ஆகிய மூன்று பேரும் காசிபாளையத்தில் இருந்து டூவீலரில் கோபி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மூல வாய்க்கால் அருகே சென்றபோது கோபியில் இருந்து இண்டியம்பாளையம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் டூவீலர் மீது எதிர்ப்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு விக்னேஷ் ஏற்கனவே விட்டதாக தெரிவித்தனர்.

சென்னியப்பன், பிரபுவும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி