கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் வீடுகளுக்கு அசுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ராய்ச்சூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிராம மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே டெங்கு காய்ச்சல் பரவல் கர்நாடகத்தில் வேகமெடுத்துள்ளது. கர்நாடகத்தில் ஒட்டுமொத்தமாக 15 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலியாகி உள்ளனர். இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.