புத்தாண்டை வரவேற்ற ஈரோடு மக்கள்

68பார்த்தது
2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததை அடுத்து, ஈரோடு மக்கள் வண்ண பலூன்களை மேலே பறக்க விட்டு 2025ஐ உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 

நாடு முழுவதும் 2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடியுள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, ஈரோட்டில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ஈரோட்டில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். 

சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள சிஎஸ்ஐ பிரப் நினைவு ஆலயத்தின் மேல்பகுதியில் உள்ள டிஜிட்டல் பலகையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் ஹேப்பி நியூ இயர் என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக குரல் எழுப்பி, தங்கள் கைகளில் வைத்திருந்த வண்ண பலூன்களை மேலே பறக்கவிட்டு, ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர், குழுக்களாக சேர்ந்து கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர் கேக் ஊட்டியும் மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி